Pages

Monday 27 August 2012

பெரியாரிசம்......... (பதிவு 5)



பெரியாரிசம் (பதிவு 5)

பெரியாரிசத்தின் கடவுள் மறுப்புக்கொள்கையின் இன்னொரு வெளிப்பாடு.. புராணங்களும், இதிகாசங்களும் பொய்யும், புனைசுருட்டும் கலந்தவைகள். இவைகள் மனிதர்களின் அறிவை மழுங்கடிக்கின்றன.

இந்த கருத்து மிகவும் அபத்தமானது, முட்டாள் தனமானது.

இதற்க்கு உதாரணமாக ஒரு புராணக் கதை ஒன்றை சுட்டிக் காண்பிக்க விரும்புகிறேன்.

ஒருமுறை நாரதர் ஒரு பழத்தைக் கொண்டு வந்து, "இது யாருக்குமே கிடைக்காத ஞானப்ப


ழம், இதை நான் உண்பதை விட தாங்கள் உண்பது தான் சிறந்தது" என்று கூறி சிவபெருமானிடம் கொடுத்தார்.

சிவபெருமான், பார்வதி தேவியைப் பார்த்து "உமையவளே நீ என்னை இயக்கும் சக்தியாக, என்னில் சரிபாதியாக இருக்கிறாய், நம்மை அனைவரும் 'அம்மை அப்பன்' என்றுதான் அதாவது அம்மை என்று உன்னைத்தான் முதலில் நிறுத்தி அழைக்கிறார்கள். எனவே இந்தப் பழத்தை நான் உண்பதைவிட நீ உண்பதே மிகவும் சிறப்பு" என்று கூறி அம்மையிடம் தந்தார்.

அதற்க்கு அம்மையும்" நாம் அம்மை அப்பன் ஆகிவிட்டோம். இனி வருங்காலம் நம் பிள்ளைகளின் கையில் உள்ளது. எனவே இதை பிளைகளுக்கே தந்துவிடலாம்" என்று கூறுகிறாள்.

விநாயகன், முருகன் இருவரில் யாருக்குத் தருவது என்பதில் குழப்பம் வந்தபொழுது, சிவபெருமான் இருவரில் யார் உலகத்தை முதலில் சுற்றி வருகிராகளோ அவர்களுக்குத்தான் இந்த ஞானப்பழம்.
என்று கூறிவிட்டார்.

உடனே முருகனும் உலகை சுற்ற புறப்பட்டான், ஆனால் விநாயகனோ நாரதரைப் பார்த்து "நாரதரே, உலகம் என்றால் என்ன? அம்மையப்பன் என்றால் என்ன?" என்று கேட்டான்? நாரதரும் மற்றவர்களும்
விநாயகனின் கருத்தை ஆமோதித்தனர்.

விநாயகனும் அம்மை அப்பனை சுற்றிவந்து பழத்தைப் பெற்றுக்கொண்டான்.

இந்தக் கதையை இத்துடன் முடித்துக்கொள்ளலாம்.

இந்தக்கதையை ஏன் இவ்வளவு விரிவாக தந்தேன்? என்றால் இதில் மிக முக்கியமான வாழ்வியல் கோட்பாடு உள்ளது.

என்னவென்று யோசித்து வையுங்கள்.

மீண்டும் அடுத்தப் பதிவில் ....

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள் சார்... நன்றி...

Post a Comment