Pages

Friday 17 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-4)



மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-4)



அன்பார்ந்த வாசகப் பெருமக்களே வணக்கம்,



இந்தப் பதிவில் 29-௦02-1976 அன்று காலை 11.00 க்கும் 02-03-1976 அன்று அதிகாலை 5.30 க்கும் இடைப்பட்ட காலகட்டத்தை ஆராய்வோம்.



இந்த காலகட்டத்தில் குருவும் கேதுவும் ஒரே ராசியில் ஒன்றை நோக்கி ஒன்றாக அமைந்துள்ளது. அனால் இருவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் சுமார் 210 இப்படியான அமைவு ஆண் பெண் இருபாலருக்கும் என்ன குறை இருக்கிறது என்பதை கண்டு பிடிப்பது கடினம்.

சுக்கிரன் செவ்வாய் திரிகோண அமைவு பெற்றிருக்கிறது எனவே இவ்விரண்டையும் தனியே வரிசைப் படுத்திப் பார்க்கும் போது சுக்கிரனை அடுத்து செவ்வாய் இருக்கிறது. இருவருக்கும் இடைப்பட்ட வித்தியாசம் 120 பாகை. இப்படிப்பட்ட அமைவு பெண்ணுக்கு சூதக வலி (மாதவிடாயின் போது வயிற்றுவலி) ஏற்படும். ஆணுக்கு உற்பத்தி செய்யப்பட்ட விந்தணு தொகுப்பின் உயிர் தன்மை அல்லது வாழும் தன்மை குறைவாக இருக்கும்



இனி மேற்படி இரண்டு கால கட்டத்திற்கு இடைப்பட்ட காலத்தில் (௦01-03-1976 – 8.30 AM) பிறந்த ஒரு ஆணின ஜாதகத்தை ஆராய்வோம். (110 35’ வடக்கு ; 770 52’ கிழக்கு)



இந்த ஜாதகத்தில் உள்ள குரு சுக்கிரனை முன்பே பார்த்துவிட்டோம்.



இனி 3 ம் பாவம் ஆரம்பமுனையை (ரிஷபத்தில் 180 38’) ஆராய்வோம் 3 ம் பாவ ஆரம்ப முனை ரோகினி நட்சத்திரத்தில் உள்ளது. ரோகினியின் அதிபதி சந்திரன். சந்திரன், சூரியன், புதன், ராகு ஆகியவற்றுடன் திரிகோண அமைவைப் பெற்றுள்ளது.



இந்த நன்கு கிரகங்களையும் வரிசைப் படுத்த



புதன் 010 37’

சூரியன் 170 14’

சந்திரன் 180 44’

ராகு 210 32’ என்ற வரிசையில் அமைந்துள்ளது



இந்த அமைவின்படி 3 ம் அதிபதி சந்திரனும் ராகுவும் சுமார் 20 பாகை வித்தியாசத்தில் எதிர் எதிராக அமைகிறது. இந்த அமைவு ஆண் பெண் இருபாலருக்கும் சுக்கில சுரோணித உற்பத்தியில் குறை நிச்சயமாக இருக்கும். இந்த குறைபாடு மருத்துவத்தால் கண்டுபிடிக்க முடியும். ஆனால் தீர்க்க முடியுமா? என்பது கேள்விக்குறியே.

Wednesday 15 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-3)

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-3)

அன்பான வாசகப் பெருமக்களே வணக்கம்.

கடந்த பதிவில் ஒரு பெண்ணின் ஜாதகத்தை ஆய்வு செய்யலாம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

17-12-1978  அன்று பிற்பகல் 2-00 க்கும் 19-02-1978  அன்று இரவு 11.00 க்கும் இடைப்பட்ட காலத்தில் 770 54’ (கிழக்கு) ; 110 46’ (வடக்கு)  இந்தப் பெண் பிறந்திருக்கிறார்.



 இந்தப்பெண் கும்ப லக்கினத்தில் (160 25’) பிறந்திருக்கிறார்.

ஐந்தாம் பாவ ஆரம்ப முனை மிதுனத்தில் 120 47ல் அமைந்துள்ளது. அதாவது திருவாதிரை நட்சத்திரத்தில் அமைந்துள்ளது. இந்த ராகுவுடன் திரிகோண அமைவு பெற்ற கிரகங்கள் எதுவும் இல்லை. மேலும் ராகு அடுத்துள்ள சனியை நோக்கி நகர்கிறார். சனி ராகுவுக்கு நட்பு கிரகம் எனவே ராகு கெடவில்லை என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. காரணம் ராகு கண்ணியில் அஸ்த்தம் நட்சத்திரத்தில் இருக்கிறார். அஸ்த்தம் நட்சத்திரத்தின் அதிபதி சந்திரன். ராகுவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் பகை.

அடுத்து குடும்பத்திற்கு புது வரவை குறிக்கும் 2 மிடத்தை ஆராய்வோம்.

இந்த ஜாதகத்தில் 2 மிடம் ஆரம்ப முனை மீனத்தில் (160 49ல்) ரேவதி நட்சத்திரம் 1 ம் பாதத்தில் அமைந்துள்ளது. ரேவதியின் அதிபதி புதன். இந்த புதன், சூரியன், குரு, சந்திரன், சுக்கிரன் செவ்வாய் ஆகிய கிரகங்களுடன் திரிகோண அமைவு பெற்றுள்ளது. இவற்றை அந்தந்த ராசிகளில் கடந்துள்ள பாகை கலை அடிப்படையில் வரிசைப் படுத்த

குரு (மிதுனத்தில்) 030 47
சூரியன் (கும்பத்தில்) 050 33
சந்திரன் (மிதுனத்தில்) 090 03
புதன் (கும்பத்தில்) 090 31
சுக்கிரன் (கும்பத்தில்) 100 34
செவ்வாய் (மிதுனத்தில்) 280 09என்று அமையும்.

இந்த வரிசைப்படி புதன் சந்திரன் இருவரும் ஒரே பாகையில் சில விகலை இடைவெளியில் அமைந்துள்ளது. இந்த அமைவு சந்திரனுடன் சமாஹம நிலை எனப்படும். புதன் சந்திரன் இருவரும் பகையாக இருந்து, புதன் சந்திரனுடன் சமாஹம நிலையையும் அடைந்துள்ளதாலும், சூரியனில் சுமார் 4 பாகை இடைவெளியில் புதன் அஸ்தங்கமும அடைந்துள்ளதாலும் குடும்பத்திற்கு ஒரு புதிய சேர்க்கை ஏற்படுவதில் தடை உள்ளது.

வாழ்க வளமுடன்

அடுத்தப் பதிவில் வேறு ஒரு தம்பதியினரின் ஜாதகங்களை ஆராய்வோம்.

Monday 13 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-2)

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-2)

கடந்த பதிவில் ஒரு ஆணின ஜாதகத்தை ஆய்வு செய்தோம். இந்த பதிவில் அவருடைய மனைவியின் ஜாதகத்தை ஆய்வு செய்வோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அதற்கு முன்பாக இந்தப் பெண் பிறந்ததற்கு முன்பின் நாட்களில் பொதுவான (லக்கினமில்லாமல்) கிரக அமைப்பைப் பார்க்கலாம்.

 அதாவது 17-12-1978 அன்று பிற்பகல் 2-00 க்கு ஒரு கட்டமும் 19-02-1978 அன்று இரவு 11.00 க்கு ஒரு கட்டமும் தந்திருக்கிறேன்.



இவ்விரண்டு காலகட்டத்திலும் குரு மற்றும் சுக்கிரன் இருவரையும் ஆராய்வோம். 

குரு சுக்கிரன் இருவரும் புதன் சூரியன் செவ்வாய் சந்திரன் ஆகிய கிரகங்களுடன் திரிகோண அமைவு பெற்றுள்ளதை கவனிக்கவும். இவர்கள் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை அடிப்படையில் வரிசைப்படுத்தி பார்க்கும் பொழுது கீழ்க்கண்டவாறு அமையும்.

17-02-1978 / 2.00.PM               19-02-1978 / 11.00.PM

சந்திரன் (மிதுனத்தில்) 000 28      குரு (மிதுனத்தில்) 030 46
குரு (மிதுனத்தில்) 030 47          சூரியன் (கும்பத்தில்) 070 14
சூரியன் (கும்பத்தில்) 040 50       புதன் (கும்பத்தில்) 120 23
புதன் (கும்பத்தில்) 080 18          சுக்கிரன் (கும்பத்தில்) 120 39
சுக்கிரன் (கும்பத்தில்) 090 40       செவ்வாய் (மிதுனத்தில்) 270 43
செவ்வாய் (மிதுனத்தில்) 280 19     சந்திரன் (மிதுனத்தில்) 290 06

என்ற வரிசையில் கிரகங்கள் அமைந்திருக்கும்.

குருவுக்கும் சூரியனுக்கும் இடையில் குறைந்த பட்சம் 1 பாகையும் அதிகபட்சம் 3½ பாகை வரையும் வித்தியாசம் இருக்கிறது.இப்படியான அமைப்பை நாடி விதிப்படி சூரியனில் அஸ்தங்கம் என்று கூறப்படும். குரு அஸ்தங்கம் ஆனதால் குரு வலிமை குன்றி இறக்கிறார்.

இப்படியான அமைவு ஒரு ஜாதகத்தில் இருந்தால் அந்த ஜாதகர் ஆணாக இருந்தால் சுக்கிலம் புத்திர உற்பத்திக்கு ஏற்ற வகையில் இருக்காது. இந்த குறைபாட்டை கண்டுபிடிப்பது கடினம்.

அடுத்து சுக்கிரனை ஆராய்வோம். சுக்கிரன் சதய நட்சத்திரத்தில் இருக்கிறது. சதயம் ராகுவின் நட்சத்திரம் ஆகும். சுக்கிரன் அடுத்து செவ்வாய் இருக்கிறது. ராகு மற்றும் செவ்வாய் சுக்கிரனுக்கு நட்பு கிரகங்களே ஆனாலும் இந்த அமைவு ஆணுக்கு சுக்கில உற்பத்தி, பெண்ணுக்கு சுரோணித உற்பத்தி, கர்ப்பப்பை கோளாறு கண்டுபிடிக்க சற்று கடினமான அளவில் இருக்கும். லக்கினப்படி ஆராய்ந்தால் இன்னும் கூடுதலான தகவல் கிடைக்கும்.

வாழ்க வளமுடன்

அடுத்த பதிவில் மேற்குறிப்பிட்ட கால இடைவெளியில் பிறந்த அந்தப்பெண்ணின் ஜாதகத்தை ஆராயலாம்.

Saturday 11 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-1)



மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.(தொடர்ச்சி-1)





அன்பார்ந்த வாசகப் பெருமக்களே இந்த பதிவில் 08-10-1978 அன்று காலை 6.00 க்கு மேல் 09-10-1978 / பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்கும் இடைப்பட்ட காலத்தில் அதாவது 09-10-1978 அன்று இரவு 11.30 க்கு 110 30’ (வடக்கு) ; 770 52’ (கிழக்கு) பிறந்த ஒரு ஆணின ஜாதகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



இந்த ஜாதகர் ஒரு ஆண், இவருக்கு லக்கினம் மிதுன ராசியில் 130 31’ 45” –ல் அமைந்துள்ளது.



சுக்கிரன் கேது சம்மந்தம் பற்றி முந்தய பதிவிலேயே பார்த்துவிட்டோம். அடுத்ததாக குரு-வை ஆராய்வோம்.



மேற்படி ஜாதகத்தில் குரு கடகத்தில் 130 8’ 53” ல் இருக்கிறார்.



குருவுக்கு அடுத்தபடியாக சனி இருக்கிறார். குரு சனி இருவரும் ஒருவருக்கு ஒருவர் நட்பு. மேலும் ஒரு ஜாதகத்தில் குரு சனியை சேர்ந்தாலும் சனி குருவை சேர்ந்தாலும் யோகமே. குழந்தை பாக்கியம் உண்டு. அதே சமயத்தில் சனியானவர் மந்தன் என்பதால் தாமதமாகத்தான் கிடைக்கும்.



அடுத்து மூன்றாம் பாவக ஆரம்ப முனை(கடகத்தில் 100 55’ 10”) நின்ற நட்சத்திரம் பூசம். பூசத்தின் அதிபதி சனி. இந்த சனிபகவானை ஆராயவேண்டும்.



சனிக்கு 5-ல் சந்திரன் இருக்கிறார். 9-ல் யாரும் இல்லை. எனவே சனி, சந்திரனை திரிகோண அமைவு கிரகங்களாக எடுத்துக்கொள்ளலாம். எனவே சனி சந்திரன் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை விகலை அடிப்படையில் வரிசை படுத்தி பார்க்கும் பொழுது



சனி (சிம்மத்தில்) 130 49’ 18” லும்

சந்திரன் (விருச்சிகத்தில்) 260 55’ 34” லும் இருக்கின்றனர்.



மூன்றாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி (சனி) விந்தணு உற்பத்திக்குக் காரணமாகிறார். என்பது தெரிந்ததே. இந்த சனிக்கு அடுத்து சந்திரன் இருப்பது - சனி சந்திரன் ஒருவருக்கு ஒருவர் பகை- இவருக்கு உற்பத்தியாகும் விந்தணு தொகுப்பு நீர்த்திருக்கும் அல்லது எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதை காட்டுகிறது.



அடுத்து ஐந்தாம் பாவக ஆரம்பமுனை (துலாத்தில் 140 56’ 32”) நின்ற நட்சத்திரம் சுவாதி. இதன் அதிபதி ராகு. இந்த ராகுவை ஆராய வேண்டும். பொதுவாக எந்த ஒரு பாவகத்தின் ஆரம்பமுனையும் ராகுவின் நட்சத்திரங்களில் (திருவாதிரை, சுவாதி, சதயம்) அமைவது அந்தந்த பாவகத்தை நசிக்கும். (திரிகோண அமைவு பெற்ற கிரகங்களை சம்மந்தப்பட்ட திரிகோண ராசிகளில் எந்தெந்த ராசிகளில் கிரகம் இருக்கிறதோ அந்தந்த ராசிகளில் பாகை கலை வரிசைப்படி அமைத்துக்கொள்ளலாம், கிரகங்கள் இல்லாத ராசியில் அமைக்கக் கூடாது. உதாரணமாக சனி சந்திரன் திரிகோண அமைவு பெற்ற கிரகங்கள் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். இந்த சனி சந்திரனை தனுசு மற்றும் சிம்மத்தில் அமைக்கலாம், மேஷத்தில் அமைக்கக்கூடாது.)



சனி சந்திரனை சிம்மத்தில் வைத்துப் பார்க்கும்போது சந்திரன் 260 55’ 34” ல் இருப்பதாலும் சந்திரனை அடுத்து (கண்ணியில்) ராகு 10 03’ ௦1” ல் இருப்பதாலும் ரகுவும் சந்திரனும் ஒன்றையொன்று எதிர் நோக்குகின்றனர். ராகுவும் சந்திரனும் ஒருவருக்கு ஒருவர் பகை என்பதால் புதிர உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளது என்றுதான் கூற வேண்டும்.



அடுத்து 2 மிட ஆரம்ப முனை (கடகத்தில் 110 6’ 15”) நின்ற நட்சத்திர அதிபதி சனி பகவான். சனிபகவானின் நிலைய முன்பே பார்த்துவிட்டோம் (ஏன் இரண்டாமிடத்தை ஆய்வு செய்ய வேண்டும்? குடும்பத்தில் புதிதாக சேரப்போகும் நபரை குறிப்பிடுவது இரண்டாமிடம், எனவே இரண்டாமிடத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்



இதுவரை மேற்குறிப்பிட்டுள்ள ஜாதகத்தை ஆய்வு செய்ததில்



அ) குரு 70% சாதகமாக இருக்கிறது. (சனி மந்தப் படுத்துவதால் - 30%) (தோராயமான மதிப்பீடுதான்)



ஆ) சுக்கிரன் சாதகமாக இல்லை



இ) மூன்றாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி சனி சாதகமாக இல்லை



ஈ) ஐந்தாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி ராகுவும் சாதகமாக இல்லை.



உ) இரண்டாம் பாவக ஆரம்ப முனை நின்ற நட்சத்திர அதிபதி சனி சாதகமாக இல்லை



எனவே இவருக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கான வாய்ப்பு தோராயமாக 15% முதல் 20%. மட்டுமே முறையான சிகிச்சை, வாய்ப்பை அதிகப்படுத்தும். வாய்ப்பை அதிகப்படுத்துவது காலத்தின் கையில்



வாழ்க வளமுடன்



அடுத்த பதிவில் இவருடைய மணைவி ஜாதகத்தை ஆய்வு செய்யலாம்....

Thursday 9 January 2014

மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.




அன்பார்ந்த வாசகப் பெருமக்களே, வணக்கம்.



நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பதிவு....



மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.



பொதுவாக இன்றைய காலகட்டத்தில், ஜோதிடம் பொய் என்பதற்கு, ஜோதிடம் அறிவியல் பூர்வமானதல்ல, வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் மனிதர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற கருத்தை முன் வைக்கப் படுகிறது.



ஜோதிடம் வெறும் அறிவியல் பூர்வமானது என்பதைவிட “ஜோதிடம் அறிவியல் பூர்வமானதும் விஞ்ஞானப் பூர்வமானதும் ஆகும்” என்பதே சரி. அறிவியல் வேறா? விஞ்ஞானம் வேறா? என்று கேட்டால்.... ஆம் இரண்டும் வேறு வேறுதான்.



எப்படி? அறிவியல் என்பது அறிவு தொடர்புடையது. விஞ்ஞானம் என்பது வின்+ஞானம் விண்ணில் உள்ள நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் பற்றிய ஞானம் ஆகும்.



ஜோதிடம் விஞ்ஞானப் பூர்வமானதும் அறிவியல் பூர்வமானதும் என்பது பற்றியும், கிரகங்களும் நட்சத்திரங்களும் மனிதர்களை கட்டுபடுத்துகிறது என்பது பற்றியும் என் அறிவுக்கு எட்டியவரை ஒரு ஆய்வு



குழந்தை பாக்கியம் இல்லாமைக்கு மருத்துவ ரீதியாக மூன்று காரணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன



(அ) ஆண் மலடு அல்லது குறைபாடு,



(ஆ) பெண் மலடு அல்லது குறைபாடு,



(இ) ஆண் பெண் இருவரும் மலடு அல்லது குறைபாடு.



இந்த மூன்றுவிதமான பிரச்சனைகளுக்கும் மருத்துவ அறிவியலில் தீர்வு உண்டு.



ஆனாலும் மருத்துவ அறிவியலால் தீர்க்க முடியாத நான்காவதாக ஒரு பிரச்சனை இருக்கின்றது. அதாவது இருவருக்குமே எந்தவிதமான குறையும் இல்லை. அனைத்துவிதமான பரிசோதனைகளிலும் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் குழந்தை இல்லை.



இவ்வகை தம்பதியருக்கு, குழந்தை கண்டிப்பாகப் பிறக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மருத்துவரிடம் செல்கிறார்கள். மீண்டும் பரிசோதனை. பரிசோதனை முடிவு அனைத்தும் சரியாக இருக்கிறது. எந்தக் குறையும் இல்லை. மருத்துவரின் கருத்து “எங்களுக்குத் தெரிந்தவரை, எங்களால் முடிந்தவரை அனைத்தும் செய்தாகிவிட்டது. இதற்குமேல் தெய்வத்தின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையை கைவிடாதீர்கள்.”



நம்பிக்கையுடன் மேலும் சில ஆண்டுகள். ஆனாலும் குழந்தை இல்லை. இங்கு மருத்துவரின் திறமை, அறிவு, மருத்துவ அறிவியல் ஆகிய எவற்றையும் குறை கூறவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. (மருத்துவ) அறிவியலாலும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளும், சங்கதிகளும் இருக்கிறது. என்பதை சுட்டிக் காட்டுவதே இக் இக்கட்டுரையின் நோக்கம்.



இனி ஜோதிட ரீதியாக மேற்படி குழந்தை இல்லாமை பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது பற்றி காண்போம்.



ஜோதிடரீதியாக குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் (கிரக அடைவு) நிறைய உண்டு. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால் அது சாத்தியம் இல்லை. காரணம், மருத்துவரீதியாக குழந்தை இல்லாமைக்கு எவ்வளவோ கரணங்கள் இருந்தாலும், கண்டுபிடிக்க முடியாத காரணங்களும் உண்டல்லவா? கண்டுபிடிக்கப்பட்ட காரனங்களிலேயே ஒருவருக்கு தெரிந்த காரணம் மற்றவருக்கு தெரியாமலிருக்கிறது என்பதும் உண்மைதானே? அதுபோல சோதிடத்திலும் நமது அறிவுக்கு அப்பாற்பட்ட பல சங்கதிகள் இருக்கின்றன என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.



இந்தக் கட்டுரையில் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விளக்கங்ககளை தந்திருக்கிறேன்.



ஒரு ஜாதகத்தில் ஆணின் சுக்கிலத்திற்கும்(விந்தணு), பெண்ணின் சுரோனிதத்திற்கும்(கரு முட்டை) மூல கர்த்தாவாக சுக்கிரனும், கரு உற்பத்திக்கு கர்த்தாவாக குருவும், ஐந்தாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதியும், குழந்தை பேறு-க்கு காரணமாக இருக்கும். இவை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானவை.



ஆணாக இருந்தால் விந்தணு உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட விந்தணுக்களின் செயல்திறன் ஆகியவற்றிற்கு மூன்றாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதி காரணமாக இருக்கும்.



கீழே உள்ள இரண்டு ராசி கட்டங்களையும் பார்க்கவும். இரண்டிலுமே லக்கினம் குறிக்கப்படவில்லை, என்பதை கவனிக்கவும். ஒரு சில விஷயங்களை லக்கினம் இல்லாமலேயே நிர்ணயிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டவே லக்கினத்தை குறிப்பிடவில்லை. மேலும் இரண்டு கட்டங்களும் வாக்கிய கணிதப்படி கணிக்கப்பட்டவை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.



ஆணின சுக்கிலத்திற்கும், பெண்ணின் சுரோனிதத்திற்கும் மூல கர்த்தாவாக சுக்கிரன் காரணமாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்

கீழே உள்ள 08-10-1978 / காலை 6.00 க்கு ஒரு கட்டமும் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்கு ஒரு கட்டமும் உள்ளது.





இரண்டு கட்டங்களிலும் சுக்கிரன், கேது, குரு ஆகிய மூன்று கிரகங்களும் வெளிர் நீல நிற கட்டத்தில் இருப்பதை கவனிக்கவும். இப்படியான அமைப்பை, மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோனத்தில் இருப்பதாக ஜோதிடத்தில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் கேதுவும், கேது நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் குருவும் குரு நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் சுக்கிரனும் இருப்பது திரிகோண அமைவு எனப்படும். இப்படி உள்ள கிரகங்களை, கிரகங்கள் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை விகலை அடிப்படையில் வரிசை படுத்தி பார்க்கும் பொழுது



கேது 8-10-1978 அன்று (மீனத்தில்) 10 8’ 31” லும், 9-10-1978 அன்று 10 2’ 29” லும்

சுக்கிரன் 8-10-1978 அன்று (விருச்சிகத்தில்) 00 37’ 6” லும், 9-10-1978 அன்று 10 32’ 42” லும்

குரு 8-10-1978 அன்று (கடகத்தில்) 120 56’ 10” லும், 9-10-1978 அன்று 130 10’ 06” லும்



என்ற வரிசையில் அமையும். இந்த வரிசைப்படி கேது சுக்கிரன் ஆகிய இருகிரகங்களுக்கும் இடையே 1 பாகைக்கும் குறைவான வித்தியாசம் இருக்கிறது. இப்படி சுக்கிரனும் கேதுவும் மிக நெருக்கமான நிலையில் இருந்தால், இப்படி ஒரு அமைவு ஆண்களின் ஜாதகத்தில் அமைந்தால் (அதாவது 08-10-1978 / காலை 6.00 க்கு மேல் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்குள் பிறந்துள்ள) பெரும்பாலானவர்களுக்கு விந்தணு (சுக்கிலம்) உற்பத்தியில் பிரச்சினை இருக்கும். அதாவது விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும் அல்லது விந்தனுக்களின் வாழும் தன்மை (விந்தணு ஆணிடமிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கருக்குழாய் வழியாக சென்று கர்ப்பப்பையை அடைந்து கரு உருவாகும் வரை உள்ள கால இடைவெளி) குறைவாக இருக்கும். இதே அமைவு பெண்களின் ஜாதகத்தில் இருந்தால் பெரும்பாலானவர்களுக்கு கரு முட்டை (சுரோணிதம்) உற்பத்தி ஆவதில் பிரச்சனை இருக்கும். அதாவது விந்தணுவை தன்னுள் வாங்கி கருவாக்க முடியாத அளவிற்கு சக்தி அற்றதாக இருக்கும். அல்லது கர்ப்பப்பை சுருங்கி இருக்கும். இந்த வகை குறைபாட்டை மருத்துவத்தில் கண்டுபிடித்து தீர்வு காணமுடியும். இந்த தீர்வு வெற்றி அடைவதும், அடையாததும் காலத்தின் கையில்.



மேலே குறிப்பட்ட கால கட்டத்திற்குள் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் (60% முதல் 70% வரை) மேலே குறிப்பிட்ட குறைபாடு காணப்படும். லக்கினப்படி ஆராய்ந்தால் மேலும் கூடுதலான தகவல் கிடைக்கும்.



இந்தக் கட்டுரையையும் இதன் தொடர்ச்சிகளையும் படிக்கும் வாசக அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், ஒவ்வொரு பதிவிலும் உள்ள கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை, (மேற்குறிப்ட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு இடைபட்ட காலத்தில் பிறந்த தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஜாதகத்தை ஒப்பிட்டு) இங்கு பின்னூட்டம் இடவும். வேறு தேதியில் பிறந்திருந்தாலும் குழந்தை இல்லாத தம்பதியினர்களில் (60% முதல் 70% வரை) பெரும்பாலானவர்களுக்கு சுக்கிரன், குரு இரண்டு கிரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ ராகு அல்லது கேது அல்லது பகை கிரகங்களினால் பாதிக்கப் பட்டிருப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளவும். இதுவரை பல்வேறு தலைப்புகளில் “சர்வே” நடத்தப்பட்டிருக்கிறது. அதுபோல இதுவும் ஒரு “சர்வே” இந்த சர்வே-க்கு உங்களின் ஆதரவை அளித்து ஜோதிடத்தின் பரிமாணத்தை உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.



வாழ்க வளமுடன்



மேற்படி விஷயங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

இதற்கான மேலும் கூடுதல் தகவல் மற்றும் விளக்கங்களுடன் அடுத்த பதிவில்.....