Pages

Thursday 11 August 2011

பத்மாசனம் செய்து பாருங்களேன்..


பத்மாசனம் 

சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும். பிராணயாமம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.


படம் 1 (பத்மாசனம்)


படம் 2 (பத்மாசனம்)

செய்யும் முறை

கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதலில் இடது காலை வலது தொடையிலும் வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம்.


ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம். வலி தொந்தரவு ஏற்பட்டால் ஆசனத்தைக் கலைத்து விடலாம்.


பத்மாசனம் மட்டுமல்ல எந்த ஒரு ஆசனத்தையும் கண்டிப்பாக உடலை வருத்தி செய்யக்கூடாது.


படம் 1 (வலது மற்றும் இடது அர்த்த பத்மாசனம்)



பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வலது அர்த்த பத்மாசனத்தையும் பிறகு இடது பத்மாசனத்தையும் செய்து பழகிக் கொண்டபிறகு பத்மாசனத்தை செய்யலாம்.


பயன்கள்


பத்மாசனத்தில் இருக்கின்றபோது மனிதநரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது. நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது. நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது. கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது. இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது.


மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன. மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகிறது. மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன. கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.

படம் 3



படம் 3- ல் காட்டியுள்ளது போல தலையை குனிந்த படி இருக்கக் கூடாது.

முத்குத் தண்டும் தலையும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்





உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் அளிக்கவும்.


வாழ்க வளமுடன்.

1 comment:

Narendhiran said...

படம் 3 / தவறை படத்துடன் சுட்டிக்காட்டியது வரவேற்கத் தக்கது.

நன்றிகளும் பாராட்டுகளும்.

தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

Post a Comment