Pages

Thursday 18 August 2011

இன்று சித்தாசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.



பொதுவாக எந்த ஒரு ஆசனத்தையுமே பொறுமையாகத்தான் செய்தல் வேண்டும். ஏதோ கடமைக்கு, வேலைக்குச் செல்லும் அவசரத்தில் செய்தல் கூடாது. அது மேலும் உடலுக்கு தீங்கிழைக்குமே ஒழிய சீர்படுத்தாது. ஆகையால் ஆசனங்களை பொறுமையாக செய்து காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட வேண்டும்.

இன்று சித்தாசனம் பற்றி தெரிந்து கொள்வோம்.

கீழே படத்தில் உள்ளவாறு அமர்ந்து கொள்ளவேண்டும்.



கைகளை நீட்டி கால் முட்டிகளில் வைக்க வேண்டும். நிமிர்ந்த நிலையில் காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்து வரவேண்டும்.

கீழே படங்களில் உள்ளது போல கைகளை துவள விட்டோ தலையை குனிந்த்படியோ இருக்கக் கூடாது.







இதை முறையாகக் கடைப் பிடித்தால் உடலுக்குத் தேவையான பிராண சக்தி கிடைக்கும்.

மன அழுத்தம் நீங்கும். இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நீண்ட ஆயுளைத் தரும் ஆசனங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

No comments:

Post a Comment