Pages

Friday 30 September 2011

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு?????? தொடர்ச்சி (2)

முந்தையப் பதிவு



இறைவனை கடவுள் என்றும் குறிப்பிடுவதுண்டு.

கடவுள் என்றால் அனைத்தையும் கடந்து நிற்றல், என்று சிலர் கூறுகின்றனர்.

அதாவது அனைத்தையும் கடந்து (துறந்து) நிற்பதுதான், துறவு கொள்வதுதான் கடவுள் தன்மையா?

இன்னும் சிலர் கடந்து உள்ளே செல்லுதல் என்று கூறுகின்றனர்.

இப்படி தன்னைகடந்து உள்ளே செல்லுதல் என்பது சமாதி நிலை ஆகும்.

எந்தவிதமான செயல்பாடு இல்லாத சமாதி நிலைதான் இறைத்தன்மையா????

இன்னும் சிலர்

கடந்து செல்லுதல் என்பது துறவரத்தையோ, சமாதி நிலையையோ குறிப்பதல்ல,

இப்பூவுலகமானது திடபொருளாக, ஸ்தூல (பஞ்சபூத) அம்சமாக இருக்கிறது.

இது அனைவருக்குமே பொதுவான விஷயம்.

இப்பூவுலகில் வாழும் மனிதர்களாகிய நம் அனுபவங்கள் மாறுபடுகின்றன.

எனவே உலகம் என்பது திடபொருளாக, ஸ்தூல (பஞ்சபூத) அம்சமாக இருந்தாலும், ஒவ்வொரு

தனினபரைப் பொருத்தவரை அவருடைய மனம் சார்ந்த அம்சமாக இருக்கிறது.

ஆகவே கடந்து செல்வது என்பது மனதோடு தொடர்புடையது.

அதாவது மனதை கடந்து அல்லது ஊடுருவி செல்வது.

அதாவது எதிலும் தங்கியிருக்காத நிலை என்று கடவுள் பற்றி விளக்கம் தருகிறார்கள்.

இன்னும் சிலர் கடவுள் நம்முள்ளேதான் இருக்கிறது. என்றும் கூறுகிறார்கள்.

இப்படி கடவுளைப்பற்றி ஏராளமான கருத்துக்கள் உள்ளன.

ஒவொன்றையும் தனித்தனியாக யோசிக்கும்போது எல்லாமே சரியாகவே இருக்கிறது.

ஆனாலும் இத்துடன் நாம் திருப்தி அடைந்துவிட முடிகிறதா???

மற்றவர்களின் அறிவுப்பூர்வமான விளக்கங்களும், அனுபவங்களும் நம்மை திருப்தி படுத்திவிடுமா???

அதாவது கடவுள் என்பது மனம் சார்ந்த ஒன்று என்றால், கடவுள் வெறும் மனக்கற்பிதம் என்று கூறிவிட

முடியுமா???

அவரவர் அனுபவத்தால்தான் உணரமுடியும் என்றால், அனுபவங்கள் எல்லாம் முழுக்க முழுக்க உண்மை

என்று கூறிவிடமுடியாது. அதே சமயத்தில் அனுபவங்களை நிரூபிக்க முடியாது.

நிரூபிக்க முடியவில்லை என்பதாலேயே பொய் என்றும் கூறிவிடமுடியாது.

இந்த இடத்தில் மூன்று நிலைப்பாடு இருக்கிறது.

1) கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று மறுப்பவர்கள்.

இவர்களுடைய கருத்துக்கள் அனைத்தும் கடவுள் இருக்கிறது என்று கூறுபவர்களை மறுதளிப்பதாகவோ,

விமர்சனம் செய்வதாகவோ தான் இருக்கும்.

இவர்களைப் பற்றி நாம் பெரிதாக கண்டுகொள்ளத் தேவையில்லை.

காரணம் இல்லவே இல்லை என்ற எதிமறை கொள்கை உடையவர்கள்

அதாவது முடிவை முன்கூட்டியே நிர்ணயித்துவிட்டு ஒரு ஆய்வை மேற்கொள்ளும்போது அந்த முடிவுக்கு

மேல் ஆய்வு செய்ய முடியாது.

2) கடவுள் இருக்கிறது, இதற்க்கு மேல் நான் "கடவுளுக்கு எதிரான எந்த விதமான சிந்தனைக்கும்

ஆய்வுக்கும் இடம் இல்லை" என்று கூறுபவர்களையும் நாம் கண்டுகொள்ள வேண்டியதில்லை.

காரணம் இவர்களும் தனக்கேற்பட்ட சில (நிரூபிக்க முடியாத) அனுபவங்களை மட்டுமே வைத்துக் கொண்டு

தங்களுடைய நிலைப் பாட்டிலிருந்து மாற முடியாதவர்கள்.

கடவுள் இருக்கிறது என்றோ, இல்லை என்றோ ஒரு முடிவை எடுத்துவிட்டு எப்படி ஆய்வை செய்வது???

நாம் ஒரு முடிவை எடுத்துவிட்டு ஆய்வு செய்வோமானால், நமது முடிவுக்கு அப்பால் நமது ஆய்வு

செல்லாது. ஒரு கயிற்றில் கட்டப்பட்ட மாடு ஒரு எல்லைக்குள் மட்டுமே மேய முடியும். அதற்க்கு அப்பால்

செல்ல முடியாது.

எனவே மூன்றாம் நிலைப்பாட்டிளிருக்கும் நாம் ஆய்வை தொடருவோம்.

அதென்ன சார் மூன்றாம் நிலைப்பாடு???

இறைவன் இருக்கிறான். ஆனால்

1) எப்படி இருக்கிறான்???

2) அவன் வேலை என்ன???

3) அவனுக்கும் நமக்கும் இடையே உள்ள பந்தம், உறவு என்ன???

இப்படி நேர்மறையான சிந்தனையுடன் ஆய்வை தொடர்ந்தால் நிச்சயம் ஒரு நல்ல பதில் கிடைக்கும்.

மேற்கொண்டு நமது ஆய்வை அடுத்த பதிவில்.....



அன்புடன்.......

Wednesday 21 September 2011

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு??????? (தொடர்ச்சி 1)

முந்தைய பதிவு



எல்லாம் அவன் செயல்.....

அவனன்றி ஓர் அணுவும அசையாது....

இறைவனே கர்த்தா. நாம் வெறும் கருவியே.....

பம்பரத்தைச் சுற்றும் சாட்டை அவனே. நாம் வெறும் பம்பரம்தன்....

பொம்மலாட்டத்தின் சூத்திரதாரி இறைவனே. நாம் வெறும் பொம்மைகள் தான்....

நமதென்று எந்த செயலும் கிடையாது. அனைத்தும் அவன் திருவிளையாடலே...

இவையெல்லாம் உண்மையா???

அவன்தான் நம்மை ஆட்டுவிக்கிறானா???

நாம் வெறும் கருவிதானா???

நமக்கென்று சுயமாக எந்த செயலும் கிடையாதா???

இப்படி இன்னும் நிறைய கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம்...

அனைத்து செயல்பாடுகளுக்கும், அனைத்துநிகழ்வுகளுக்கும் கரணம் இறைவன் என்றால் உலகில் நிகழும்

அனைத்து அநீதிகளுக்கும், கொடுமைகளுக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டியவராகிறார்.

ஒரு சிலரை நல்லநிலையில் ஆரோக்கியமாகவும், இன்னொரு சிலரை ஆரோக்கியமற்றவராகவும்

படைப்பது இறைவன் என்றால் ....இது எந்த விதத்தில் நியாயம்???

ஒருசிலரை செல்வந்தர்களாகவும், இன்னொரு சிலரை ஏழ்மை துன்பத்தில் வாடுபவர்களாகவும் படைத்தது

இறைவன் என்றால்.... அவனுக்கு ஏன் இந்த பாகுபாடு???

இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன், வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் என்று

சொல்வதெல்லாம்...........

இறைவன் கருணை உள்ளவனாக, தருமவானாக இருந்தால் இப்படியெல்லாம் செயல்படுவாரா???

இப்படிப்பட்ட கேள்விக் கணைகளை தாங்க முடியாது என்ற காரணத்தினால்தான் இறைவன்

யார்கண்ணுக்கும் தெரியாமல் மறைந்து இருக்கிறாரா???

இங்கு இரண்டு புராணக்கதைகளை நிணைவு படுத்த விரும்புகிறேன்.

கதை 1

முனிவர் ஒருவர் தனது ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருந்தார்..

ஒருநாள் அவர் கிழிந்து போன தனது ஆடையை தைத்துக் கொண்டிருந்தார்.

இப்படி தவத்தில் சிறந்த முனிவர் ஆடை கிழிந்து அதை தைத்து அணியும் அளவிற்கு ஏழ்மையில்

இருப்பதைக் கண்ட இறைவன் முனிவர் முன்பு தோன்றி "அப்பனே உனக்கு வேண்டிய வரத்தை

தருவதற்காகவே வந்திருக்கிறேன். உனக்கு வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

இந்த முனிவரோ "இறைவா!!! தங்களின் வருகைக்கும். அடியேனுக்கு வேண்டும் வரம் தர இருப்பதற்கும்

மிக்க நன்றி. ஆனால் தனக்கு எந்தக் குறையும் இல்லை.அதனால் எனக்கு எதுவும் தேவைப் படவில்லை.

எனவே தாங்கள் என்னை மன்னிக்க வேண்டும்." என்று இறைவனிடம் கூறினார்.

ஆனால் இறைவனோ விடவில்லை.

"மகனே நான் எவர முன்பாவது தோன்றினால் வரம் கொடுக்காமல் போக மாட்டேன். எனவே உனக்கு

வேண்டிய வரத்தைக் கேள்" என்றார்.

முனிவருக்கு என்ன வரம் கேட்பது என்று புரியவில்லை.

வேறுவழியில்லாமல் ஒருவரத்தைக் கேட்டார்.

"இறைவா நான் எனது கிழிந்த ஆடையை ஊசியில் நூலை கோர்த்து தைத்துக் கொண்டிருக்கிறேன்.

இது போல நான் தைக்கும் போதெல்லாம், ஊசியின் பின்னாலேயே நூலும் வரவேண்டும்."

என்று கேட்டார்.

ஏற்கனவே ஊசியின் பின்னால்தானே நூல் வந்துகொண்டிருக்கிறது, இதில் நான் வரம் தந்து ஆவது எதுவும்

இல்லையே! என்றார்.

உடனே முனிவரும் "இறைவா இதுமட்டுமல்ல எல்லாமே இப்படித்தான் நிகழ்கிறது. இதில் நீங்கள்

செய்வதற்கு என்ன இருக்கிறது??? என்று முனிவர் திருப்பிக் கேட்டதும் இறைவன் மறைந்தார்.

கதை 2

ஒரு முனிவர் தவமிருந்தார். அவரின் தவத்தை மெச்சி இறைவன் காட்சி தந்து வேண்டும் வரத்தைக் கேள்

என்றார். முனிவரும் தனக்கு குறை ஏதும் இல்லை எனவே தன்னை மன்னிக்கும்படி இறைவனை

வேண்டினார். இறைவனும் தான் வரம் தந்தே ஆகவேண்டும் என்று நிற்கிறார்.

வேறுவழி இல்லாமல் முனிவரும் ஒரு வரம் கேட்டார்.

முனிவருடைய இடது முழங்காலில் ஒரு தழும்பு இருந்தது. அதை தனது வலதுகாலுக்கு மாற்றித் தருமாறு

கேட்டார்.

உடனே இறைவன் "மகனே இது உன்னுடைய பிராப்த கர்மாவால் உருவானது. என்னால் மாற்ற முடியாது

என்று கூறி மறைந்தார்.

மேற்படி இரண்டு கதைகளும் இறைவன் சக்தி அற்றவன் என்று கூறுகின்றனவா???

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் என்று கூருகின்றனவா???

விதியையும் பிராப்ததத்தையும் மாற்றியமைக்க இறைவனால் கூட முடியாது என்று கூருகின்றனவா???

இறைவனுக்கும் நமக்கும் உள்ள பந்தம் தான் என்ன????

அடுத்தப் பதிவு

அன்புடன்

இறைவனுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு???????



அனைவருக்கும் வணக்கம்.


இங்கு நான் ஒரு வித்தியாசமான கேள்வியுடன் ஒரு கருத்தை சமர்ப்பிக்கிறேன்.

இங்கு நான் சமர்பிக்கும் கருத்துக்கள் யார்மனத்தையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல என்பதை

பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஆன்மீகத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு,

என்பதையும் இங்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இனி விஷயத்திற்கு வருகிறேன்.

விதியை வெல்ல முடியுமா? அல்லது எல்லாமே விதிப்படிதான் நடக்குமா?

ஆன்மீகத்திற்கும், விதி, கர்மா போன்றவைகளுக்கும் சம்மந்தம் இல்லை என்றால், பெரும்பாலானோர்

ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஆனால் ஜோதிடத்திற்கும், விதி,கர்மா இவைகளுக்கும் தொடர்பு உண்டு, என்றால் யாரும் மறுக்கவும்

மாட்டார்கள்.

பொதுவாக நாம் அனைவருமே தங்களுடைய கர்ம வினையிலிருந்து, அல்லது ஜாதகப்படி உள்ள தீய

விதியிலிருந்து விடுபடுவதற்காக தங்களால் முடிந்த அளவுக்கு பரிகாரங்கள் செய்துவருகிறோம்.

அதாவது நமக்கு வேண்டிய நன்மைகளை இறைவனை பிரார்த்தனை செய்து அடைந்துவிடுவதாகவும்

அதற்க்கு நன்றிக்கடனாக நாம் ஏதாவது பரிகாரத்தையோ, காணிக்கையா நேர்த்திக்கடனாக

செய்துவிடுகிறோம்

அதாவது இறைவன் அருளால் நமது தீவினைகள்(பாவங்கள்) தீர்க்கப் படுகின்றன என்பது நம்மில்

பெரும்பாலானோர் கோட்பாடு.

இதில் நியாயம் இருக்கிறதா?

இந்தக் கேள்வியை ஒரு உதாரணத்துடன் கேட்டால், இந்தக் கேள்வியில் உள்ள நியாயம் புரியும்.

கொலைக குற்றம் சாட்டப்பட்டு நிரூபிக்கப்பட்ட ஒருவனுக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது
(இன்னும் வழங்கப்படவில்லை)

இந்த சமயத்தில் குற்றவாளி நீதிபதியிடம் " அய்யா நான் கொலை செய்தது உண்மைதான். நீங்கள்

பெரியமனது வைத்து என் குற்றத்தை மன்னித்து என்னை விடுதலை செய்ய வேண்டும். நானும் எனது

குடும்பத்தாரும் உங்களை எங்கள் குலதெய்வமாக வணகுவோம். மேலும் உங்களுக்கு நன்றிக்கடனாக

(நேர்த்திக்கடனாக) எனது சொத்தில் பாதியை உங்களுக்கு தந்துவிடுகிறேன். அரசாங்கத்திற்கும் ஒரு

தொகையை அபராதமாக செலுத்திவிடுகிறேன். தயவுசெய்து என்னை விடுதலை செய்து காப்பாற்றுங்கள்.

என்று கேட்டால்...

நீதிபதியும் குற்றவாளியின் பிரார்த்தனையை ஏற்று, சரி உன்னை மன்னித்து விடுகிறேன். நீயும், நீ கொடுத்த

வாக்கை காப்பாற்று. என்று சொன்னால்....

இதுபோல எத்தனையோ அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் அவர்களுடைய துதிபாடிகளுக்குத்

தேவையான நன்மைகளை செய்தால்....

அதாவது பிழைக்கத் தெரிந்தவர்கள் துதிபாடி (மாமூல் பாடி) பிழைத்துக் கொள்வதும். மற்றவர்கள்

துன்பப்படுவதும் ......

இறைவனிடத்தும் இதே அணுகுமுறைதானா???

பரிகாரங்கள் பிரார்த்தனை செய்தால் இறைவன் நமக்கு நன்மை செய்வாரா???

பரிகாரங்கள் பிரார்த்தனை செய்யாவிட்டால் நமது துன்பத்தை கலையமாட்டாரா??? துன்பங்கள் தொடருமா???

இறைவனும் தற்கால அரசியல் வாதிகளையும், அதிகாரிகளையும் போலத்தான் செயல்படுகிறாரா???

நமக்கு வாழ்வில் நல்லவைகள் நடக்கவேண்டுமானால், இறைவனை பிரார்த்தனை செய்து,

அபிஷேக ஆராதனைகள் செய்து, அர்ச்சனை செய்து, இப்படி இன்னும் பலவாறாக இறைவனை மகிழ்விக்க

வேண்டுமா???

இந்த இடத்தில் ஒரு வேடிக்கையான (அனைவருக்கும் தெரிந்த) கதையை .....

ஒரு புலவர் தனது வறுமையை போக்க அரசனிடம் சென்றார். மன்னனைப் புகழ்ந்து ஒரு கவிதை பாடினார்.

மன்னனும் மனமகிழ்ந்து இந்த அருமையான கவிதை 1000 பொன் பரிசளிக்கத் தகுந்தது என்று கூறினார்.

புலவரும் மகிழ்சியடைந்து மேலும் ஒரு அழகான கவிதையை பாடினார். அரசனும் மனமகிழ்ந்து

பரித்தொகையை கூட்டினார். இப்படி புலவர் பாடப்பாட மன்னனும் பரிசுத்தொகையை கூட்டிக்கொண்டே

போனதில் பரிசுத்தொகை புலவருக்குத் தேவையான அளவுக்கு வந்ததும் புலவர் பாடுவதை நிறுத்தினார்.

புலவர் பரிசுக்காக காத்திருந்தார்.

மன்னன் சரி புலவரே போய்வாருங்கள் என்று கூறினார்.

புலவர் சற்று அதிர்ச்சியுடன், மன்னா, பரிசில் பொன்.... என்று மெதுவாக இழுத்தார்.

மன்னனும், ஓ.. அதுவா? நீர் என்னை மகிழ்விக்க ஏதேதோ பாடினீர், நானும் உம்மை மகிழ்விக்க ஏதேதோ

சொன்னேன். இரண்டுக்கும் சரியாகிவிட்டது. நீர் போகலாம். என்று கூறி வழியனுப்பினார்.

இப்படி இறைவனும் செய்தால் நாம் இறைவனை ஏற்றுக்கொள்வோமா???

புகழ்ச்சிக்கும், வேண்டுதல்களுக்கும் மயங்கும் சாதாரண மனிதனுக்கும் இறைவனுக்கும் என்ன

வித்தியாசம்.???

ஊழல பேர்வழிகளுக்கும் இறைவனுக்கும் என்ன வித்தியாசம்???

சபலபுத்தி கொண்ட சராசரி மனிதனுக்கும் என்ன வித்தியாசம்???

இறைவனின் நிலைதான் என்ன???

நமக்கு நல்வினைகளையும் பிராப்தங்களையும் இறைவனிடம் பிரார்த்தித்து (யாசித்து) பெறவேண்டுமா?

அவராக மனமிறங்கி நமக்கு (தன் குழந்தைகளுக்கு) நமை செய்ய மாட்டாரா???

நமக்கும் இறைவனுக்கும் உள்ள பந்தம் இவ்வளவுதானா?

இப்படி எதோ ஒன்று மனதை நெருடுகிறதே????

நிச்சயமாக இறைவனைப் பற்றிய மேற்படி வியாய்க்கியான விஷயங்கள் எதுவும் உண்மையாக இருக்க

முடியாது.என்பதுமட்டும் உண்மை.

அப்படியென்றால் உண்மை என்ன???????

இறைவனுக்கும் நமக்கும் உள்ள உண்மையான பந்தம் என்ன??????????


அடுத்த பதிவு

அன்புடன்....

Monday 22 August 2011

தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்...

வாழ்க வளமுடன்
சூரியநமஸ்காரம் செய்வது எப்படி என்று கீழே நிகழ் படமாக கொடுத்திருக்கிறேன்




சூரிய நமஸ்காரத்தின் பயன்கள்

சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் கசக்கிக் கசக்கிப் பிடித்து விடுவது போன்ற மசாஜ் செய்யப்படுகின்றன. மலச்சிக்கல் மறைகின்றது. குன்மமும் பசியின்மையும் பறந்தோடுகின்றன. வயிற்றுக்குள் இருக்கும் இசைவாகப் பணிபுரிகின்றன. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்குவதே இல்லை. இதனால் உறுதியடைகின்றது.
சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரிசக்காற்றையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.
இதயத்தை முடக்கிவிட்டு இரத்த ஒட்டத்தை வேகப்படுத்தி உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற தூரவெளி உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.
மாறி மாறி, மடக்கி நீட்டி – நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது. சென்றதைப் பற்றிய கவலையும் வரப் போவதைப் பற்றிய அலட்டலுமின்றி உள்ளம் அமைதியடைகின்றது. பிற உயிரணுக்களைக் காட்டிலும் நரம்பு உயிரணுக்கள் மிக மிகத் தாமதமாகவே விழிப்புற்று உயிராற்றல் பெறுகின்றன. இருப்பினும் இடையறா முறையான பயிற்சியாலும் சலிக்காத முயற்சியாலும் சிறுகச் சிறுக நரம்பு உயிரணுக்கள் தத்தம் சாதாரணக் காரியங்களைச் செய்யத்தக்க வலுவடைகின்றன.
சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன.
தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது. சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.
சூரிய நமஸ்காரத்தில் உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலுவடைகின்றன. குறிப்பாக கழுத்து, தோள், கை, மணிக்கட்டு, வயிற்றுச்சுவர், தொடை, கெண்டைக்கால், கணுக்கால் முதலிய பகுதிகளில் தசைகள் பயிற்சியால் உரம் பெறுகின்றன. கொழுப்பால் வயிறு, தொடை, இடுப்பு, கழுத்து, நாடி முதலிய இடங்களில் உண்டாகும் மடிப்புகள் மறையும். தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே சரியாக மலம் (கழிவுப் பொருட்கள்) வெளியேறுவதால் உடலில் விரும்பத் தகாத துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
சூரிய நமஸ்காரத்தில் உடல் சரியான அளவில் அமையப் பெறுவதால் அது எந்த விளையாட்டுப் பயிற்சி வேலைகளுக்கும் எப்போதும் தயார் நிலையில் இருக்கும். இளமை, நலம், அழகு மூன்றும் ஒருங்கே அமைந்து உடலுக்கும் உயிருக்கும் அழியா இன்பத்தைக் கொடுக்க வல்லது.
யார், எங்கு, எப்படி, எப்போது செய்வது?
சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம். அறையிலும் செய்யலாம்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.

Thursday 18 August 2011

இன்று சித்தாசனம் பற்றி தெரிந்துகொள்வோம்.



பொதுவாக எந்த ஒரு ஆசனத்தையுமே பொறுமையாகத்தான் செய்தல் வேண்டும். ஏதோ கடமைக்கு, வேலைக்குச் செல்லும் அவசரத்தில் செய்தல் கூடாது. அது மேலும் உடலுக்கு தீங்கிழைக்குமே ஒழிய சீர்படுத்தாது. ஆகையால் ஆசனங்களை பொறுமையாக செய்து காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட வேண்டும்.

இன்று சித்தாசனம் பற்றி தெரிந்து கொள்வோம்.

கீழே படத்தில் உள்ளவாறு அமர்ந்து கொள்ளவேண்டும்.



கைகளை நீட்டி கால் முட்டிகளில் வைக்க வேண்டும். நிமிர்ந்த நிலையில் காற்றை நன்கு உள்வாங்கி வெளிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 5 நிமிடங்கள் செய்து வரவேண்டும்.

கீழே படங்களில் உள்ளது போல கைகளை துவள விட்டோ தலையை குனிந்த்படியோ இருக்கக் கூடாது.







இதை முறையாகக் கடைப் பிடித்தால் உடலுக்குத் தேவையான பிராண சக்தி கிடைக்கும்.

மன அழுத்தம் நீங்கும். இரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரிக்கும். மூளை நரம்புகளுக்கு புத்துணர்வூட்டுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

நீண்ட ஆயுளைத் தரும் ஆசனங்களில் இதுவும் ஒன்று.

இவ்வாசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

Friday 12 August 2011

யோகா முத்ரா ஆசனமும் செய்யலாமே..



பத்மாசனத்தில் அமர்வது போல அதே நிலையில் உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்பு இரண்டு கைகளையும் முதுகுப்புறமாக பின்புறம் கொண்டு வந்து கையின் மணிக்கட்டு பகுதியை இடது கையால் (இறுகப் பிடிக்காமல்) லேசாகப் பற்றிக் கொண்டே மெதுவாக முன்பக்கமாக குனிய வேண்டும்.

படம் 1



நன்கு குனிந்து, தலையின் உச்சி தரையைத் தொடும் நிலைக்கு வர வேண்டும். ஆரம்பத்தில் தரையை தொட முடியாவிட்டால் சிரமப்பட வேண்டாம். முரட்டுத்தனம் வேண்டாம். நாளடைவில் சரியாகி விடும். தரைதொட்ட அந்த நிலையில் சற்றே இழுத்து மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டே நிமிர்ந்து மீண்டும் பத்மாசன நிலைக்கு வந்து (பிணைக்கப்பட்ட கைகளை ஒருபோதும் விலக்கக் கூடாது) மெதுவாகப் பின்னர் மூச்சை வெளியே விட்டுக் கொண்டே முன்பு சொன்னது போல தரையை நோக்கி குனிய வேண்டும். இவ்வாறு மூன்று தடவைகள் செய்ய வேண்டும். அதற்கு ஒரு நிமிட நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படம் 2



நிமிர்ந்து வரும்போது மூச்சை நன்றாக உள்ளே இழுப்பதும், மீண்டும் குனிந்து கொண்டே வருகையில் தாரளமாய் மூச்சை வெளியே விடுவதும் மிக மிக அவசியம். அதுவே நுரையீரல் நன்கு விரியக் காரணமாகி, வலிமை கொடுக்கும்.

பலன்கள்:

ஜீரண உறுப்புகள் பலமடைகின்றன. அதனால் அவற்றின் இயக்கங்கள் அனைத்தும் வேகமாக நடை பெறுகின்றன. குடலின் இயக்கம் சீராகிறது. வயிற்று வலியும், வயிற்றுப் போக்கும் ஓடிவிடும். இந்த ஆசனம் நீடித்த மலச்சிக்கல் நோய் உள்ளவர் களை விரைவில் குணப்படுத்தி விடும். இடுப்பும், வயிற்றுப் பாகமும் அழகான அமைப்பை பெற்றிடும். நுரையீரல் நோயே வராது. முக்கியமாக ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம்.

மேலும் யோகாசனங்களுக்கு இங்கே

வாழ்க வளமுடன்....

Thursday 11 August 2011

பத்மாசனம் செய்து பாருங்களேன்..


பத்மாசனம் 

சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும். பிராணயாமம், தியானம், நாடிசுத்தி போன்றவற்றை பத்மாசனத்தில் அமர்ந்தே செய்ய வேண்டும். சாப்பிடும் போது பத்மாசனத்தில் அமரக் கூடாது.


படம் 1 (பத்மாசனம்)


படம் 2 (பத்மாசனம்)

செய்யும் முறை

கால்களை நீட்டி உட்கார்ந்து, வலது காலை கைகளின் உதவியுடன் தூக்கி இடது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். பின்னர் இடது காலை தூக்கி வலது தொடையில் அடிவயிற்றை ஒட்டினாற் போல் வைக்கவும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். முழங்கால்கள் தரையில் படக் கூடியதாக நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும். முதலில் இடது காலை வலது தொடையிலும் வலது காலை இடது தொடையிலும் வைத்தும் உட்காரலாம்.


ஒரு நிமிடம் முதல் அரைமணிநேரம் வரையில்கூடப் பத்மாசனத்தில் இருந்து பழகலாம். வலி தொந்தரவு ஏற்பட்டால் ஆசனத்தைக் கலைத்து விடலாம்.


பத்மாசனம் மட்டுமல்ல எந்த ஒரு ஆசனத்தையும் கண்டிப்பாக உடலை வருத்தி செய்யக்கூடாது.


படம் 1 (வலது மற்றும் இடது அர்த்த பத்மாசனம்)



பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் முதலில் வலது அர்த்த பத்மாசனத்தையும் பிறகு இடது பத்மாசனத்தையும் செய்து பழகிக் கொண்டபிறகு பத்மாசனத்தை செய்யலாம்.


பயன்கள்


பத்மாசனத்தில் இருக்கின்றபோது மனிதநரம்பு மண்டலம் முழுவதும் சுறுசுறுப்படைந்து புத்துணர்ச்சியைப் பெறுகிறது. நமது உட்சுவாசமும் வெளிச்சுவாசமும் ஒழுங்குபட்டு நடப்பதால் சுவாசம் சீரான இயக்கத்துக்கு வருகிறது. நுரையீரல்களுக்குச் செல்லும் காற்றிலுள்ள பிராணவாயு இரத்தத்தோடு பூரணமாக் கலக்கிறது. கரியமிலவாயு செம்மையாக வெளியேறுகிறது. இவ்வாறு சுவாசமும் இரத்த ஓட்டமும் சீரானகதிக்கு வருவதால் இரத்த அழுத்தமும் இயல்புநிலைக்கு வருகிறது.


மன அமைதியின்மையும் மனச்சஞ்சலங்களும் மறைகின்றன. மனத்தின் இறுக்கநிலை தளர்ந்து மனம் அமைதியைப் பெறுகிறது. மனோபலம் வருகிறது. முதுகெலும்பு, இடுப்பு எலும்புகள், கால் எலும்புகள் ஆகியன வலிமை பெறுகின்றன. கூனல் விழுவது தடுக்கப்படுகிறது.

படம் 3



படம் 3- ல் காட்டியுள்ளது போல தலையை குனிந்த படி இருக்கக் கூடாது.

முத்குத் தண்டும் தலையும் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்





உங்கள் கருத்துக்களை பின்னூட்டம் அளிக்கவும்.


வாழ்க வளமுடன்.

Friday 22 July 2011

எத்தனை காலந்தான் ......


எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...
இன்னும் எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே
ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே...

சத்தியம் தவறாத உத்தமன் போவே நடிக்கிறார்
சத்தியம் தவறாத உத்தமன் போவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.
சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்.

பக்தனை போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே...

தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோ.......ம்
தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம்
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்.
கல்வி தெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்.
கருத்தாக பல தொழில் பயிலுவோம்
கருத்தாக பல தொழில் பயிலுவோம்..
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்.
ஊரில் கஞ்சிக்கில்லை என்ற சொல்லினை போக்குவோம்.
எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே ஒங்க நாட்டிலே நம்நாட்டிலே..

ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்...... ஆளுக்கு ஒரு வீடு கட்டுவோம்.
அதில் ஆன கலைகளை சீராக பயில்வோம்
அதில் ஆன கலைகளை சீராக பயில்வோம்
கேளிக்கையாகவே நாளினை போக்கிட
கேள்வியும் ஞானமும் உண்டாக திரட்டுவோம்

இன்னும் எத்தனைகாலந்தான்.... இன்னும் எத்தனைகாலந்தான்
ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே... இந்த நாட்டிலே.....


சின்னப் பயலே.. சின்னப் பயலே..


சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..
நான் சொல்லபோற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா.
நீ...எண்ணிப் பாரடா.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி..
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி..

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா.
தம்பி மனதில் வையடா.
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா.
தம்பி மனதில் வையடா.

வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலது கையடா. நீ வலது கையடா.
வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலது கையடா. நீ வலது கையடா.

தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா..நீ தொண்டு செய்யடா.
தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா..நீ தொண்டு செய்யடா.

தானா எல்லாம் மாறிடும் என்பது பழைய பொய்யடா.எல்லாம் பழைய பொய்யடா.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...............
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...............
விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க
உந்தன் வீரத்த கொழுந்துலேயே கில்லி வப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவேடாதே....நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே..நீ வெம்பிவிடாதே...

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

கல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......

தமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின்

படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை

தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

பொன்னியின் செல்வன் 1

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 3

பொன்னியின் செல்வன் 4

பொன்னியின் செல்வன் 5

பொன்னியின் செல்வன் 6

பொன்னியின் செல்வன் 7

பொன்னியின் செல்வன் 8

பொன்னியின் செல்வன் 9

பொன்னியின் செல்வன் 10

பொன்னியின் செல்வன் 11

பொன்னியின் செல்வன் 12

சுபம்....

Wednesday 6 July 2011



         கடவுள் இருக்கின்றார்.. புரட்சி தலைவர் விளக்குகிறார்

கடவுள் இருக்கின்றார்.....
கடவுள் இருக்கின்றார்.....
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.

காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
                        கண்ணுக்குத் தெரிகின்றதா.
கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.

இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா.
இருளில் விழிக்கின்றாய் எதிரே இருப்பது புரிகின்றதா.

இசையை ரசிகின்றாய் இசையின் உருவம் வருகின்றதா
உள்ளத்தில் இருக்கும் உண்மையின் வடிவம் வெளியே தெரிகின்றதா.
                                          வெளியே தெரிகின்றதா.

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
                              கண்ணுக்குத் தெரிகின்றதா.

புத்தனும் மறைந்துவிட்டான் அவன் தன் போதனை மறைகின்றதா
புத்தனும் மறைந்துவிட்டான் அவன் தன் போதனை மறைகின்றதா

சத்தியம் தோற்றதுண்டா உலகில் தர்மம் அழிந்ததுண்டா
இதை சரித்திரம் முழுதும் படித்த பின்னாலும் சஞ்சலம் வருகின்றதா.
                                          சஞ்சலம் வருகின்றதா.

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.

தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது
தேடியும் கிடைக்காது நீதி தெருவினில் இருக்காது

சாட்டைக்கு அடங்காது நீதி சட்டத்தில் மயங்காது
காலத்தில் தோன்றி கைகளை நீட்டி காக்கவும் தயங்காது.

கடவுள் இருக்கின்றார் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா
காற்றில் தவழுகிறாய் அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா.
                              கண்ணுக்குத் தெரிகின்றதா.

கடவுள் இருக்கின்றார்...
கடவுள் இருக்கின்றார்...
கடவுள் இருக்கின்றார்

இதோ வீடியோ காட்சி...



Tuesday 5 July 2011

திருக்குறளில் முரண்பாடு.....


அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்.

இந்தக் குறளின் பொருள் : அரம் போல கூர்மையான அறிவுடையவராக இருந்தாலும், மனிதப் பண்பு இல்லாதவன் மரத்திற்குச் சமமானவன்.

இதில் மனிதப் பண்பில்லாதவனை மரத்திற்கு சமமாக வள்ளுவர் கூறுகிறார். இது சரியா?

மரம என்பது அவ்வளவு கேவலமானதா? மரம மனிதனுக்கு எந்தெந்த வகையில் பயன்படுகிறது? என்பது நம் அனைவருக்குமே நன்றாக தெரியும். வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது?



நல்லவை எல்லாஅந் தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

இந்தக் குறளின் பொருள் : செல்வம் தேடுவதற்கான ஒருவனுடைய செயல்பாடுகள் நேர்மையானதாக இருந்தபோதிலும் அது தீமையாய் முடிவதும், நேர்மையற்றதாக இருந்தபோதிலும் அது நன்மையாய் முடிவதும் இயற்கையானதே.

கேள்வி : இதுதான் இயற்கை என்றால் இவ்வுலகில் நேர்மை என்ற சொல்லே இருக்காதே. வள்ளுவப் பெருந்தகைக்கு இது ஏன் தெரியாமல் போனது?

மேற்படி குறள்களில் என்ன பிழை?


யாராவது விளக்கம் தாருங்களேன்...

ஆண்டவன் கட்டளை 6


ஆண்டவன் கட்டளை 6

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
                              தெய்வத்தின் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி.
சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பாட்டாகும்
சொல்லுக்கு செய்கை பொன்னாகும், வரும் துன்பத்தில் இன்பம் பாட்டாகும்

இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.
                                    எல்லா நன்மையும் உண்டாகும்.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.
உண்மையைச் சொல்லி நன்மையை செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்.
நிலை உயரும்போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்.

உண்மை என்பது அன்பாகும், பெரும் பணிவு என்பது பண்பாகும்
உண்மை என்பது அன்பாகும், பெரும் பணிவு என்பது பண்பாகும்

இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்.
                                    எல்லா நன்மையும் உண்டாகும்.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

ஆசை கோபம களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..

இதில் மிருகம் என்பது கள்ள மனம், உயர் தெய்வம் என்பது பிள்ளைமனம்

இந்த ஆறுகட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.
                              ஆண்டவன் வாழும் வெள்ளைமனம்.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.

சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
                              தெய்வத்தின் கட்டளை ஆறு.
ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.



இதோ வீடியோ காட்சி...