Pages

Friday 22 July 2011

சின்னப் பயலே.. சின்னப் பயலே..


சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..
நான் சொல்லபோற வார்த்தையை நல்லா எண்ணிப் பாரடா.
நீ...எண்ணிப் பாரடா.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி..
ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி..

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீதரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
உன் நரம்போடுதான் பின்னி வளரனும் தன்மான உணர்ச்சி
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா.
தம்பி மனதில் வையடா.
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா.
தம்பி மனதில் வையடா.

வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலது கையடா. நீ வலது கையடா.
வளர்ந்துவரும் உலகத்துக்கே நீ வலது கையடா. நீ வலது கையடா.

தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா..நீ தொண்டு செய்யடா.
தனியுடமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா..நீ தொண்டு செய்யடா.

தானா எல்லாம் மாறிடும் என்பது பழைய பொய்யடா.எல்லாம் பழைய பொய்யடா.
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா..

வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...............
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு...............
விளையாடப் போகும்போது சொல்லி வப்பாங்க
உந்தன் வீரத்த கொழுந்துலேயே கில்லி வப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவேடாதே....நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே..நீ வெம்பிவிடாதே...

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா

No comments:

Post a Comment