Pages

Tuesday 4 September 2012

பெரியாரிசம் ........(பதிவு 8)

எது பகுத்தறிவு...?...?...?

பெண் விடுதலை என்றபெயரில் பெண்மையை இழிவு படுத்துவதா?

நான் பகுத்தறிவுப் பாசறையில் வளர்ந்தவன், என்று தற்பெருமை பீற்றிக்கொள்வதா?


தான்தான் அறிவாளி, மற்றவர்களெல்லாம் முட்டாள் என்று கத்திக் கொண்டிருப்பதா?

கடவுள் இல்லை என்று பிதற்றுவதா?

ஜோதிடம் பொய் என்று வாதம் செய்வதா?

இந்துமதம் எங்கே போகிறது? என்று ஏளனம் செய்வதா?

பார்ப்பனீயத்தை மட்டும் இழிவு படுத்துவதா?

புராணங்களும், இதிகாசங்களும் மக்களுக்குப் பயனற்றவை என்று இழித்துப் பேசுவதா?

பேசுவதற்கு வாய் இருக்கிறது, கையில் மைக் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவதா?

எழுதுவதற்கு பேனாவும், பேப்பரும் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் மனம் போனபோக்கில் எழுதுவதா?

எது சார் பகுத்தறிவு?

பெண்மை என்றால் என்ன? பெண் சுதந்திரம் என்றால் என்ன? என்பது பற்றி பார்ப்போம்.

மனிதர்களில் இரண்டு பிரிவுகள் மட்டுமே உண்டு. ஒன்று ஆண், மற்றொன்று பெண். இதில் உடல்ரீதியாக, ஆணுக்கு இல்லாத இரண்டு சிறப்பம்சங்கள் பெண்ணுக்கு உண்டு.

1. குழந்தை உருவாகும் கருவறை.

2. அந்தக் குழந்தைக்கு அமுதூட்டும் அமுத சுரபி.

இந்த இரண்டு சிறப்பம்சங்களும் ஆணுக்கு இல்லை,

இதைத் தவிர மூன்றாவதாக ஓரு சிறப்பம்சம் உன்டு. அது
நம் முன்னோர்கள் பஞ்ச பூதங்களில் பூமியை மட்டும் பெண்ணாக உருவப் படுத்தினார்கள். நெருப்பு, காற்று, நீர் இமூன்றையும் ஆணாக உருவப் படுத்தினார்கள் ஆகாயத்தை மட்டும்.....(பிறகு பார்ப்போம்) நெருப்பு கற்று நீர் இவை ஒன்றையன்று அழித்துக் கொள்ளும். ஆனால் பூமி எதையுமே அழிப்பதில்லை. நெருப்பு கற்று நீர் இவை மூன்று தம் கடமையை செய்ய பூமி என்ற தளம் மிக முக்கியமானது. பெண்ணின் துணை இல்லாமல் ஆணால் எதையும் சாதிக்க முடியாது.

ஆறுகளை பெண்ணாக உருவகப் படுத்தி பெண் பெயரை சூட்டியிருப்பதன் நோக்கம் என்ன? தெரியுமா?

ஆறுகள் இரு கரைகளுக்கு நடுவே கட்டுப்பாட்டுடன் ஒடும்வரை பூமி செழிப்பாக இருக்கும். வெள்ளப் பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடும்போது மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தும்.

அதுபோல பெண்கள் தன் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் எல்லாவிதத்திலும் நன்மை. மாறாக தறிகெட்டு ஆடினால் ஏற்படும் அழிவு மிகக் கொடுமையாக இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் நிறைய பெண்கள் “பெண் சுதந்திரம்” என்ற பெயரில் இந்த சமுதாயத்தில் மிகப்பெரிய சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்க்கவும்.

தான் கொண்ட லட்சியத்தில் உறுதி கொண்டிருக்கும் பெண்களில் கூட பலபேர் அந்தப் பெண்களால் சீரழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் ஓரு பெண்ணைப் பற்றி அவதூறு கிளப்புவது யார் தெரியுமா...நட்பே?

பெண்கள்தான் என்பதை உன்னால் மறுக்க முடியுமா?

மேலும் இயற்கையை “அன்னை” என்றுதான் அழைக்கிறோம். ஏன்? தெரியுமா? இயற்கை அமைதியாக இருந்தால் உலகமே அமைதியாக இருக்கும். சீறினால் பேரழிவை ஏற்படுத்தும்.

அதுபோலதான் பெண்மையும் அமைதியாக இருக்கும் வரை நன்மை. அவர்கள் ஆட்டம் போட்டால் அவ்வளவுதான்...

நான் இங்கு பெண்களை அமைதியாகத்தான் இருக்கச் சொல்கிறேன். கொத்தடிமையாக இருக்கச் சொல்லவில்லை.

பெண் சுதந்திரம் வேண்டும், என்று கேட்கிறார்களே!!!

பெண்ணுக்கு சுதந்திரம் கொடுக்கக்கூடிய அளவுக்கு யாருக்கு அதிகாரம் அல்லது யோக்கியதை இருக்கிறது?

யாரும் யாருக்கும் சுதந்திரம் கொடுக்க முடியாது. அவரவர் சுதந்திரம் அவரவர்களிடமே இருக்கிறது. தன் சுதந்திரத்தை (தனிமனித சுதந்திரத்தை) தவறாகப் பயன்படுத்துபவர்கள் (ஆணோ அல்லது பெண்ணோ) சீரழிந்துபோகிறார்கள். தனிமனிதக் கட்டுப்பாட்டுடன் தனிமனித ஒழுக்கத்துடன் சரியாகவும், நேர்மையாகவும் தன் சுதந்திரத்தை பயன் படுத்துபவர்கள் தானும் சாதித்து தன் துணையையும் சாதிக்க வைக்கிறார்கள்.

உலகப் பொதுமறை என்றும் பொய்யாமொழி என்றும் தமிழ் மறை என்றும் என்றும் உலகத்தோர் அனைவராலும் போற்றிப் புகழப்படும்

திருக்குறளில்....பெண்ணீயம்... அடுத்த பதிவில்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல கருத்துக்கள்...

கேள்விகள்... (சற்றுக் கோபத்தோடு)

நன்றி சார்...

Post a Comment