Pages

Showing posts with label பொதுவானவை. Show all posts
Showing posts with label பொதுவானவை. Show all posts

Tuesday, 19 February 2013

தாயன்பும், பிள்ளையன்பும்



ஒரு கழுகு தனது மூன்று குஞ்சுகளுடன் ஆற்றங்கரை மரம் ஒன்றில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. திடீரென்று ஒரு நாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, நீர் மட்டம் மெல்ல உயர்ந்தது.

ஆபத்தை உணர்ந்த கழுகு, சரியாக பறக்க இயலாத தனது குஞ்சுகளை எப்படியாவது காப்பாற்ற முனைந்தது.

முதல் கட்டமாக குஞ்சு ஒன்றை தன கால்களில் இடுக்கிக்கொண்டு, ஆபத்தில்லாத ஓரிடத்தை நோக்கி பறந்தது. அப்போது, கழுகின் மனதில் திடீரென்று ஒரு சிந்தனை.

"நான் துன்பபட்டாலும், என் குழந்தைகளைக் காப்பாற்ற பெரும் முயற்சி செய்கிறேன். ஆனால், எனக்கு வயதாகி, உடல் வலிமை எல்லாம் குன்றிப் போன பின், என் குழந்தைகள் இப்படி என்னை கவனிப்பார்களா?"
இந்தக் கேள்வியை தான் தூக்கிசெல்லும் குஞ்சிடம் கேட்டது கழுகு.

 "எங்கே ....முடியாது" என்றால், தாய்க் கழுகு தன்னை தண்ணீரில் தவற விட்டுவிடுமோ?" என்று பயந்த கழுகுக் குஞ்சு, "நிச்சயம் கவனித்துக் கொள்வேன். எனது வாழ்க்கையையே உனக்காக அற்பனிப்பேன்" என்றது. அதன் நடுக்கமான குரலில் இருந்தே, "குஞ்சு சொல்வது தன மீதுள்ள பயத்தினாலேயே தவிர, உண்மையாக அல்ல" என்பதை புரிந்துகொண்ட கழுகு, தனது குஞ்சை சுமந்து போய் மரம் ஒன்றின் மேல் பத்திரமாக விட்டு விட்டு திரும்பியது. பிறகு, இரண்டாவது குஞ்சியிடமும் இதே கேள்வியை கேட்டது. அதுவும் இதையே சொல்ல, அதையும் பத்திரமாக விட்டு விட்டு வந்தது.
இப்போது மூன்றாவது குஞ்சை தூக்கிக்கொண்டு பறந்த கழுகு, அதனிடமும் அதே கேள்வியை கேட்டது. மூன்றாவது குஞ்சு கோபத்தில் கொதித்தது. " உனக்கு இந்த சுயநலம் எங்கிருந்து வந்தது.? எப்படி, உன் குழந்தைகள் மீது உனக்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லாத அளவிட முடியாத பாசம் உள்ளதோ, அதே போன்று எனக்கும் என் குழந்தைகள் மீதுதான் பாசம் இருக்கும். என் தாயான உன் மீது எனக்கு அன்பு உள்ளது. என்னை வளர்க்க நீ பட்ட பாடு எல்லாம் நானறிவேன். அதற்கான நன்றி உணர்ச்சியும் எனக்கு உண்டு. எனவே, தேவைப்படும்போது உனக்கு என்னாலான உதவியை அவசியம் செய்வேன். ஆனால், என் குழந்தைகள் மீது எனக்குள் இயற்கையாக பெருகும் பாசத்துக்கு ஈடு-இணையே கிடையாது" என்றது தாய்க் கழுகை நோக்கி.

அதன் சொற்களில் இருந்த உண்மை தாய்க் கழுகின் உள்ளத்தை தொட்டது. தன குஞ்சை முத்தமிட்ட கழுகு, பெருமிதத்துடன் அதை அனைத்துக் கொண்டு, தங்களது எதிர்காலத்தை நோக்கி பறந்தது.



உலக இயல்பு இப்படி இருக்க, பிள்ளைகளையும் நம் போல் எண்ணி, அவர்களிடம் நமக்கு மட்டுமே முழு அன்பையும் செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயம்.


ஒரே ஒரு முறைத்தான் வாழப்போகிறோம், அதில் இந்த தலைமுறையுடன் சிறப்பாக வாழ கற்றுக்கொள்வோம்

Tuesday, 31 July 2012

அண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....

அன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.

ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஊழலை முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் அல்லது ஊழல முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சரியான கொள்கையாக இருக்க முடியும், இருக்க வேண்டும்.

இதில் எந்த ஒரு இந்தியருக்கும் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது.

அண்ணா ஹசாரே அவர்கள் ஊழலை எதிர்த்து போராடிக்கொண்டிருக்கிறார். இவருடைய போராட்டத்தை ஒட்டு மொத்த இந்தியாவும் ஆதரிக்கிறது.

ஆனால் இன்றைய சூழ்நிலையில்,

அதாவது ஊழலின் மதிப்பை பார்க்கும்போது 2 G யில் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கோடி, சுரங்கத்துரையில் பலலட்சம் கோடி  என்று கோடிக்கணக்கை எல்லாம் தாண்டி, ஆயிரம் கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி என்று வளர்ந்து ஆலமரமாக இருக்கும் இன்றைய சூழ்நிலையில், (செய்தி தாளின் அடிப்படையில் கூறப்பட்டது.)

நமது பிரதமர் "கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தவறான போக்கை கண்டிக்க முடியவில்லை" என்ற வகையில் தொலைக்காட்சியில் பேட்டி தந்துள்ள இன்றைய சூழ்நிலையில் 

ஒரு அயல்நாட்டு பத்திரிகை நமது பிரதமரை செயல்படாத பிரதமர் என்று விமர்சித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில்

அன்னா ஹசாரே அவர்களின் போராட்டம் சரியானதுதானா? முறையானதா?

வலுவான லோக்பால் சட்டம் தேவை என்று ஹசாரே யாரைப்பார்த்து கேட்கிறார்? ஊழல்வாதிகளைப் பார்த்து கேட்கிறார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் லோக்பால் சட்டத்தை நாங்கள் கொண்டுவந்தோம். அன்றைய பி ஜே பி இதை எதிர்த்தது. என்று காங்கிரசார் கூறுகின்றனர்.

ஆனால் அன்று எதிர்த்தவர்கள் இன்று ஆதரிக்கிறார்கள். அன்று ஆதரித்தவர்கள் இன்று லோக்பால் சட்டத்தை மதிக்கவே இல்லை.

ஏன்?

இன்றைய சூழ்நிலையில் ஊழலை ஒழிக்க முடியுமா?

குறைந்தபட்சம் கட்டுப்படுத்தவாவது முடியுமா?